இந்திய சுதந்திரத் தினவிழா கொண்டாட்டம். இன்றைய தினம் நம் பள்ளியில் 64 வது சுதந்திர தினவிழா வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டது, விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவர் திரு. இரகு அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. லோகநாதன் உள்ளிட்ட பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. V.சுஜாதா அவர்கள் இன்றைய தினத்தின் முக்கியத்துவத்தினை எடுத்துக்கூறி அனைவரையும் வரவேற்றார். அச்சமயம் கிராம பெரியவர்கள் , இளைஞர்கள் , பெற்றோர்கள் , பள்ளி ஆர்வலர்கள் , நம் பள்ளி பிள்ளைகள் முதலியோர் நிகழ்வில் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
நம் பள்ளி வளாகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வயலூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. சுதாகர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் .