இன்று (21.07.2010) நம் கடம்பத்தூர் ஒன்றிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் திரு. அப்பாதுரை அவர்கள் நம் பள்ளியை பார்வையிட்டார்கள், அச்சமயம் நம் பள்ளியில் செயல் வழிக் கற்றல் முறையில் (A.B.L. METHOD) மாணவர்கள் நன்முறையில் பாடம் கற்பதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது மாணவர்களை அறிவியல் பாடத்தில் உள்ள சிலந்தி அட்டைக்குரிய செயல்பாடுகளை விளக்கக் கூறினார் , நம் பள்ளி மாணவர்கள் அச்செயல்பாட்டினை விளக்கி கூறி பாராட்டினைப் பெற்றனர். ஐந்தாம் வகுப்பு மாணவர்களை தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை படிக்கச் செய்து அவர்களின் வாசித்தல் திறனை அறிந்து மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தார். 






No comments:
Post a Comment